web log free
March 29, 2024

ஓரினச் சேர்க்கையாளர் என இந்திய வீராங்கனை அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் ‘நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையாளராக வலம் வரும், டுட்டீ சந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த், பாலின பிரச்சினையில் சிக்கினார்.

அவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக கூறி தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. பின்னர், விளையாட்டுக்கான நீதிமன்த்தில் முறையீடு செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார்.

இந்த நிலையில் அவர், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்ற தகவலை வெளியிட்டு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த 5 வருடங்களாக தனது கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாகவும் அந்த பெண் புவனேசுவரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 2ஆம் வருடத்தில் படித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் தான் தனது உயிர் மூச்சு. எதிர்காலத்தில் அவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் தெரிவித்துள்ளார்.