web log free
March 28, 2024

கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் அடித்தது.

பின்னர் 242 ஓட்டங்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ஓட்டத்திலும் ஜானி பேர்ஸ்டோவ் 36 ஓட்டத்திலும் வெளியேறினர்.

பின்னர் வந்த ஜோ ரூட் 7 ஓட்டத்திலும் மோர்கன் 9 ஓட்டத்திலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ஓட்டத்திலும் அவுட் ஆனார்.

இறுதியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவை பட்ட நிலையில் இங்கிலாந்து அணியால் 14 ஓட்டங்கள் மட்டுமே பெற்று 241 ஓட்டங்கள் அடித்தது. இதனால் போட்டி டை ஆனாது.

பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ஓட்டங்கள் அடித்தது.

16 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ஓட்டங்கள் அடித்தது. இதன் மூலம் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

Last modified on Friday, 19 July 2019 03:25