web log free
March 29, 2024

ஆச்சிக்கு தலையணை வைத்த யுவதியின் காமம்

காதல் காமத்தோடு கண்ணை மறைக்கும் என்பர், ஆனால், பார்வை குறைபாடுள்ள முதியோர்களின் பார்வை குறைந்த கண்களை மறைக்கும் அளவுக்கு காதல் முத்திப்போய்விட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

காதலை, காமமாக்கி, நள்ளிரவில் காட்டுக்குள் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த இளைஞனுக்கும் யுவதிக்கும் விடியற்காலையில், தர்ம அடிமட்டுமே கிடைத்தது என்பதை நினைக்கும் போது, காதலுடன் காமமும் கசந்திருக்கும். விடிய,விடிய மழையிலும் கூதலிலும் காட்டுக்குள்ளிருந்த இனித்து, விடியற்காலையில் கசந்த அந்த சம்பவம், கண்டி, தமுனுபொல வதுராதெனிய எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 16 வயதான இளைஞன், தன்னுடைய வீட்டுக்கு அருகில் வசிக்கும் அதே வயதை ஒத்த, யுவதியுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

யுவதியோ பாடசாலைக்கு செல்கின்றவர். தன்னுடைய வீட்டிலிருந்து சற்று தூரத்தில் பாட்டி (ஆச்சி) வீடு இருக்கிறது.

ஆச்சிக்கு துணையாக, சிறிய வயதிலிருந்தே பேத்தி, ஆச்சியின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

தங்கியிருப்பது மட்டுமன்றி, இரவில், தன்னுடைய ஆச்சியுடன் ஒரே கட்டிலில் ஒன்றாகவே படுத்து உறங்குவார்.

அந்த யுவதி, இன்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர், ஆச்சியின் வீட்டுக்கு அண்மையில் வசிக்கும் 16 வயதான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு செல்லாத அந்த இளைஞன், வேலை வெட்டியின்றி, ஊர் சுற்றித்திரிந்துள்ளார்.

இரவைக்கு நான், உங்கள் வீட்டுக்கு வருகின்றேன், ஆச்சிக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே வருமாறு, தன்னுடைய காதலிக்கு, அந்த இளைஞன் கடந்த 26 ஆம் திகதியன்று தகவலை சொல்லியுள்ளார்.

இரவு வரும் வரையிலும் காத்திருந்த யுவதிக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஆச்சியும் தூங்காமல் முண்டிக்கொண்டே இருந்துள்ளார்.

விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. எனினும், ஆச்சியிக்க அருகிலிருந்த குப்பிலாம்பு மட்டும் மின்னிமின்னி எரிந்துகொண்டிருந்துள்ளது.

ஆச்சி, ஒரு நிமிடத்தில் கண்ணை மூடுவதற்குள், விளக்கை அந்த யுவதி ஒருவாறு அணைத்துவிட்டாள்.

இரவு, 11 மணியிருக்கும், இளைஞன் கதவையோ, யன்னலையே அல்லது இருமியோ, குருவிப் போல கீச்சிட்டோ, தான் வந்துவிட்டதாக, சமிக்ஞை கொடுத்துள்ளார்.

அதற்கிடையில் தன்னுடைய கையடக்க தொலைபேசியிலும், குறுஞ்செய்தியை அனுப்பி, தன்னுடைய வருகையை, காதலன் உறுதிப்படுத்திவிட்டார்.

பாடசாலை மாணவியுடன் கட்டிலுக்குச் சென்றிருந்த ஆச்சி, அன்றையதினம் அயர்ந்து தூங்கிவிட்டார். தன்னுடைய பேத்தியின் மீது அவ்வப்போது கைகளை போட்டு, இல்லையேல் கட்டிப்பிடித்துகொண்டுதான் அந்த ஆச்சி, தூங்குவது வழக்கம்.

சத்தம் கேட்காது கதவைத் திறந்து வீட்டுக்கு வெளியே காத்திருந்த காதலனை கட்டியணைத்துக்கொண்டு காட்டுக்குச் சென்றுவிட்டாள். காதல், காமமாகியது விடியும் வரையிலும் இருவரின் கண்களையும் இருட்டாக்கிவிட்டது.

விடிய விடிய இருட்டாகியிருந்த காடு, விடிந்தும் இருட்டாகவே இருவருக்கும் காட்சியளித்துள்ளது.

அதிகாலை 4 மணியளவில் கண் விழித்துகொண்ட ஆச்சி, தன்னுடைய பேத்தியை தேடியுள்ளார். எனினும், மூன்று தலையணைகள் மட்டுமே இருந்துள்ளன.

பேத்தியை காணவில்லை. அதற்குப்பின்னர், அண்மையில் வசிக்கும் பேத்தியின் பெற்றோருக்கு விபரத்தை தெரிவிக்க, ஊரே திரண்டு, அந்த யுவதியை தேடியுள்ளனர்.

அவ்வாறு தேடிய போதே, காட்டுக்குள் மறைந்திருந்த நிலையில் அவ்விருவரையும் ஊர்வாசிகள் கண்டுப்பிடித்து, தர்ம அடிக்கொடுத்ததன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இடையில் ஆச்சி கண் விளித்துகொண்டால் என்ன செய்வது என்று யோசித்த அந்த யுவதி, தான் படுத்திருப்பதை போலவே, மூன்று தலையணைகளை நேராக அடிக்கிவைத்துவிட்டு, அதற்கு மேல், போர்வையையும் போர்த்திவிட்டே காதலனுடன் காட்டுக்குச் சென்றுள்ளார் என்பதை நினைக்கையில், கண்பார்வை குறைந்த ஆச்சியையும் காதல் கண் மறைக்க செய்துவிட்டது.

Last modified on Saturday, 07 September 2019 12:38