Print this page

இலங்கையின் கச்சத்தீவிற்குள் அத்துமீறி நுழைந்த 12 தமிழக மீனவர்கள் கைது

February 13, 2022

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் அதிகமான விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் மீன்பிடிக்க சென்ற நிலையில் 12 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது இலங்கை கடற்படையின் அடாவடியை காண்பிக்கிறது என மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.