Print this page

ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி கேட்ட பிரபல நடிகை

November 25, 2019

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் பிரபல நடிகை ஒரு பாடலுக்கு ஆட ஒரு கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஆனால் இவர் அதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர். பின்னர் தெலுங்கில் வெளியான மகதீரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியவே, முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கி விட்டார்.
 
இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் இன்றும் பிசியாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வாலிடம் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இவரை அழைத்துள்ளனர். 
 
அதற்கு காஜல் சம்பளமாக ஒரு கோடி கேட்டுள்ளார். இதனை கேட்ட தயாரிப்பாளர் ஒரு படத்திற்கு ஒரு நடிகை பெறும் சம்பளத்தை ஒரு பாடலுக்கு இவர் கேட்கிறாரே என அதிர்ச்சியாகி உள்ளார். இதனால் அந்த பாடலுக்கு நடனம் ஆடுவரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.