Print this page

சூப்பர் சிங்கர் தொகுப்பாளினிக்கு நேர்ந்த கொடுமை

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானர்களில் ஒருவர் தியா. இவர் வில்லு படத்தில் தீம்தனக்க தில்லானா, தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் என் ஜன்னல் வந்த காற்றே பாடலையும் பாடியுள்ளார்.

கடந்த வருடம் தன் நண்பர் ஷிபு தினகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு பாரிஸ் நகரில் செட்டிலானார்.

பின் டிவி நிகழ்ச்சிகளுக்கு ஒரு வருடம் இடைவெளி கொடுத்தார். இந்நிலையில் பாரிஸ் நகரின் அவரின் லேட் டாப், ஐ போன், விலையுயர்ந்த ஆடைகள், பணம் என பலவற்றை வழிபோக்கர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

மேலும் அவரின் கணவரின் அலுவலக டாக்குமெண்ட்களையும், பாஸ்போர்ட் போன்ற வற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்களாம்.

இது குறித்து போலிஸில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கைகள் இல்லை என சமுக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Last modified on Friday, 12 June 2020 05:49