Print this page

பாலில் குளிக்கும் பிரபல நடிகை

கடந்த 2013ஆம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை ஊர்வசி ரதெல்லா, கவர்ச்சியான நடிப்பால் உலகளவில் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அமுல்படுத்தபட்ட ஊரடங்கில் பல்வேறு செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஹிந்தி நடிகை ஊர்வசி ரதெல்லா, நீருக்கு பதிலாக பாலில் குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “குடிக்கவே தண்ணியில்லை.பால் குளியல் எதற்கு” என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

Last modified on Wednesday, 17 June 2020 01:59