web log free
April 18, 2024

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மும்முரம்

இந்திய திரையுலகில் மிகப் பிரம்மாண்டமான படைப்பாக திரைக்கு வந்த படங்கள் ஏராளம். அதில் பாகுபலி1, பாகுபலி 2 போன்ற படங்கள் அடங்குகின்றன.

தற்போது அந்த படங்களை விட மிக பிரமாண்டமான முறையில் தயாராகி வருகிறது பொன்னியின் செல்வன் படம்.

பொன்னியின் செல்வன் படத்திற்காக இயக்குனர் மணிரத்தினம் அயராது உழைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் டத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளதாகவும் இதற்காக பிரம்மாண்டமான அரங்கில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்திற்காக அங்கு பிரம்மாண்ட அரண்மனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.வரும் 6ம் திகதி முதல் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறது. ஜெயம் ரவி ,சரத்குமார் ,பார்த்திபன் ,கார்த்தி ,ரகுமான், பிரகாஷ்ராஜ் ,நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் 6 ஆம் திகதி தொடங்கும் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Last modified on Tuesday, 05 January 2021 06:44