Print this page

சகுந்தலையாகிறார் சமந்தா

புராண படங்களுக்கும் சரித்திர படங்களுக்கும் வரலாற்றுக் கதைகளுக்கும் தான் மவுசு அதிகமாக இருக்கிறது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இவை மிகப்பெரும் வெற்றி பெறுகின்றன.

இதனால் இயக்குனர்கள் இவ்வாறான படங்களை எடுப்பதற்கு தற்போது வரிசைகட்டி நிற்கின்றனர்.

அந்த வகையில் தெலுங்கு மொழியில் எடுக்கப்படவுள்ள புராணக் கதைப் படமான சகுந்தலம் திரைப்படத்தில் சகுந்தலையாக சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மற்ற மாெழி சினிமாக்களை விட தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை வரலாற்று கதைகள், புராணக் கதைகள் போன்றன பிரமாண்டமாக, மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படுகின்றன.

அந்தக் கதையில் நிஜமாகவும் தத்ரூபமாகவும் கொண்டுவந்திருப்பார் இயக்குனர். அதற்கு உதாரணம் தான் பாகுபலி,ருத்ரமாதேவி பாேன்ற படங்களாகும்.

காளிதாசர் எழுதிய புகழ்பெற்ற காவியம் தான் சகுந்தலையின் காதல் கதை . இதனை ருத்ரமாதேவி, ஒக்கடு ,அர்ஜூன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய குணசேகரன் இயக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் உருவாகிறது.இதில் சமந்தா சகுந்தலை ஆக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 05 January 2021 06:43