இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி கைவிடப்பட்டுள்ளது.
3 ஒருநாள் மற்றும் மூன்று 20க்கு 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி பகலிரவு ஆட்டமாக இன்று இடம்பெறவிருந்தது.
கராச்சியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவிருந்த போட்டி மழையினால் கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்தப் போட்டி ஞாயிறுக்கிழமை நடைபெறவிருந்தது.
மழையுடனான வானிலை தொடர்ந்தால், அப்போட்டியும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவித்தன.