தியாகராஜா வீரசிங்கம் தலைமையிலான COMRADE CRICKET CLUP அணியும், முத்துசாமி மகேந்திரன் தலைமையிலான KO POWER HITTERS அணியும் தரவாலை DMC மைதானத்தில் மோதிக்கொண்டன.
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய, சட்டத்தரணியும் சிறந்த விளையாட்டு வீரருமான நேரு கருணாகரன் தலைமையில் இப்போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இன்றையப் T20 போட்டியில், மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் KO POWER HITTERS அணி வெற்றிபெற்று, வெற்றிவாகை சூடியது.
சிறந்த பந்து வீச்சாளராக KO POWER HITTERS அணியைச் சேர்ந்த மொரிஷனும், சிறந்த துடுப்பாட்ட வீரராக COMRADE CRICKET CLUP அணியைச் கிஷோவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.