Print this page

சென்னை அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி

இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் 25ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டதுடன், முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.