Print this page

முதலாம் திகதியில் இருந்து வாகனங்களுக்கு புதிய வரி


ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இவ்வருடம் வாகன வருமான உத்தரவு பத்திரம் பெற்றவர்களுக்கு இது நடைமுறைபடுத்தப்படவில்லை எனவும் அடுத்த வருடம் முதல் இவ்வரி உத்தியோகபூர்வமாக அறிவிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.