web log free
March 29, 2024

மழையால் இடைநிறுத்தம்

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இலங்கை அணி சற்று முன்னர் வரை 33 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில் போட்டி மழையால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.