Print this page

வாழ்த்துக்கு முந்தினர்

முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேதமாஸாவும், ஒருவரையொருவர் திடீரென சந்தித்துக்கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என, அமைச்சர் சஜித் பிரேமதாஸா கூறிக்கொண்டு வருகின்ற நிலையிலேயே இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உடனடியாக, காரிலிருந்து இறங்கிய மஹிந்த, உங்களுக்கு வாழ்த்துக்கள் கூறவேண்டும்.

இல்லை, இல்லை, இப்போதைக்கு வாழ்த்து கூறவேண்டாம் என சஜித் ஒருவாறு சமாளித்து பதிலளித்துவிட்டு. புதிய கட்சியின் தலைவரான உங்களுக்குத் தான் நான் வாழ்த்து கூறவேண்டும் என மஹிந்தவிடம் தெரிவித்துள்ளார். 

இதனால் அவ்விடத்திலிருந்தவர்கள் சிரித்துவிட்டனர்.

இறுதியில் இவ்விருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்ளவே இல்லை என்பதுதான் உண்மை

Last modified on Tuesday, 27 August 2019 03:19