இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரிக்கு பதிலாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவை நியமிக்க, இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முன்வந்த போதும், மஹேல அதனை நிராகரித்துள்ளார்.
அதேநேரம் இலங்கை தேசிய அணியின் பயிற்சியாளராக, செயற்பட அவர் விரும்பியதால் அவர் இந்த வாய்ப்பை இழந்ததாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
ஐபிஎல் -இல் மும்பை இந்தியன்ஸின் பயிற்சியாளராக இருக்கும் ஜெயவர்த்தன, அந்த அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்து வருகிறார்.