Print this page

சண்டையிடும் அமைச்சர்களு ஜனாதிபதி எச்சரிக்கை!

February 19, 2022

அமைச்சுக்களின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயப் பரப்புகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அமைச்சுக்களின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது  

    என அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

சில அமைச்சுக்களில் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் அமைச்சர்கள் சிலர் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு அறிவித்ததையடுத்து இது தொடர்பான ஆராயப்பட்டது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காகவே இராஜாங்க அமைச்சர்களின் விடய தானங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்களை அழைத்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வனஜீவராசிகள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடு, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகும் வரை நீடித்ததுள்ள குழப்ப நிலை என்பன தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

Last modified on Saturday, 19 February 2022 09:29