web log free
April 19, 2024

6 விக்கட்டுக்களால் பஞ்சாப் வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 22ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் 71 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த லோகேஸ் ராஹூல், போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.