Print this page

நாமலின் மனைவி குடும்பத்துடன் வெளிநாட்டுக்குப் பயணம்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது பெற்றோர் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

லிமினி ராஜபக்சவும் அவரது பெற்றோரும் நாட்டை விட்டு தெரியாத இடத்திற்கு சென்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்ற இரு மருமகளும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.