web log free
April 18, 2024
kumar

kumar

சுமார் 300 வகையான பொருட்களுக்கான இறக்குமதி தடைகள் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 1216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே  அவர் இதனை தெரிவித்தார்.

இன்று (07) காலை கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது வீட்டில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கைது செய்யப்பட்டார். 

அவரை கைது செய்ய கிளிநொச்சியில் இருந்து விசேட பொலிஸ் குழுவொன்று சென்றிருந்தது. 

இதன்போது, தன்னைக் கைது செய்வது சட்டவிரோதமானது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சபாநாயகரை தொடர்பு கொண்டு விடயத்தை தௌிவுபடுத்தினார்.

எனினும், பொலிஸார் அவரை கைது செய்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கிளிநொச்சிக்கு அழைத்துச்சென்றனர். 

இதேவேளை, மருதங்கேணி சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் செய்திருந்த முறைப்பாட்டிற்கு அமைய, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் இன்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். 

இன்று காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை 4 மணித்தியாலங்கள் அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக

யாழ். மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் த.கணகராஜ் குறிப்பிட்டார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வாக்குமூலம் பெறுவதற்காக யாழ். மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மருதங்கேணியில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி ஜெ.சற்குணதேவி, எஸ்.உதய சிவம் ஆகிய இருவருமே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவராக சமகி ஜன பலவேகயவின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று (7) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஹர்ஷ டி சில்வா அந்தக் குழுவிற்கு முன்மொழியப்பட்டார்.

அதன்படி, குழுவில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களாலும் முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அறையில் அரச நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவர் பதவி 5 மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ளது.

இதுவரை, குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்காலிக தலைவர்கள் குழுவின் பணியை வழிநடத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சமகி ஜன பலவேகய கட்சியின் உறுப்பினர்கள் ஹர்ஷ டி சில்வாவுக்குத் தலைவர் பதவியை வழங்குமாறு சபாநாயகரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் அவருக்கு அது கிடைக்கவில்லை.

 ஹர்ஷ டி சில்வா ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது சபையில் பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவராக இருந்தார்.

பொது நிதிக்கான குழு பாராளுமன்றத்தின் மிக முக்கியமான குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரங்களை மேற்பார்வையிடும் பணி இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் துணை செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் முயற்சியில் தான் ராஜினாமா செய்ததாக குற்றம் சாட்டினார்.

எஸ்.ஜே.பி.யால் ராஜினாமா செய்ததாக போலி ஆவணம் ஒன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கமகே கூறினார்.

எனது இராஜினாமாவை சுட்டிக்காட்டும் இந்த போலி ஆவணம் மாவட்ட நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களைத் தயாரித்து நீதித்துறையுடன் இவர்கள் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை என கமகே கூறினார்.

இது போன்ற ஒரு கடிதத்தை தாம் ஒருபோதும் அனுப்பவில்லை என இராஜாங்க அமைச்சர் கூறினார். துணை செயலாளர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்யவில்லை, அப்படி இருந்தால் முதலில் என்னை செயற்குழுவில் இருந்து நீக்க வேண்டும்,'' என்றார்.

எவரேனும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கட்சி விவரங்களை சரிபார்த்தால், SJB இன் பிரதிச் செயலாளராக அவரது பெயர் பட்டியலிடப்படும் என்று கமகே கூறினார்.

போலி ஆவணத்தில் இரண்டு சட்டத்தரணிகளும் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பதவியை இராஜினாமா செய்யும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் தெரிவித்தார். இந்த போலிச் செயல் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

"ரஞ்சித் மத்தும பண்டார, உங்களை இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் என்று அழைப்பது வெட்கக் கேடானது. உங்கள் அனைவரையும் நினைத்து நான் வருத்தப்படுகிறேன். சஜித் பிரேமதாச உள்ளிட்ட இந்தக் குழு நன்றியற்றவர்கள் மற்றும் நீக்கப்படுவதற்கு தகுதியானவர்கள்," என்று அவர் கூறினார்.

போலிச் செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான தனது நோக்கங்களை இராஜாங்க அமைச்சர் விவரித்தார். "இனி நான் பொறுமையாக இருக்க மாட்டேன், நான் அவர்களுக்கு சொல்ல வேண்டியது எல்லாம் தயாராக இருங்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

இரவு 11 மணியளவில் தோட்டக் கிணற்றில் இருந்து குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவியை யாரோ ஒருவர் பிடித்து துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக நிட்டம்புவ  பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவி டவல் அணிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது இருட்டில் மறைந்திருந்த ஒருவர் திடீரென அவரை கட்டிப்பிடித்து, அவர் அணிந்திருந்த டவலை கழற்றி தரையில் வீசி பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக பொலீஸ் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது

மகளின் அலறல் சத்தம் கேட்ட தாய் ஓடிவரவே உடனடியாக மாணவியை கைவிட்டு சந்தேகநபர் ஓடியதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாயும் மகளும் சந்தேக நபரை அடையாளம் கண்டு பொலிஸில் புகார் அளித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ  பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். 

மருதங்கேணிப் பகுதியில் பரீட்சை இணைப்புச் செயலகமாக இயங்கிய பாடசாலை வளாகத்தில் கூடி பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச் சாட்டின் பெயரிலேயே கொழும்பில் வைத்து கொள்ளுப்பிட்டிப் பொலிசார் கைது செய்து மருதங்கேணிக்கு அழைத்து வருகின்றனர். 

இவ்வாறு மருதங்கேணிக்கு அழைத்து வரப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குமூலம் பெறப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு ஜூலை 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்திருந்த குறித்த மனு தொடர்பிலான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்தது.

எனினும், இந்த மனு மீதான தீர்ப்பை ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, நீதிபதி A.மரிக்கார் ஆகியோர் தீர்மானித்தனர்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜா உரிமையை கொண்டுள்ளமையினால், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தைப் பெறுவதற்கான வசதிகளை செய்து தருமாறு வெளியுறவு அமைச்சரிடம் ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதற்கு சாதகமான பதிலை வழங்கியதாகவும் எதிர்காலத்தில் திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். 

தனது பதினொரு வயது பெற்ற மகளை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியான தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ரூபா ஆறு இலட்சம் நட்டஈடு வழங்கவும் பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

ஊரகஸ்மன்ஹந்திய - கோரக்கீனையைச் சேர்ந்த சித்த மரக்கல பாலித டி சில்வா என்ற தந்தைக்கே இந்த சிறைத்தண்டனையும் , நட்டஈடு மற்றும் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த சந்தேகநபரான தந்தை, தனது மகளை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார் என உரகஸ்மஹந்திய காவல் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நீதிமன்றில் தெரிவித்தது.

அந்த வழக்குகள் ஒவ்வொன்றும், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. 

இது தொடர்பில் ஊரகஹா காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், தாய் வெளிநாட்டில் இருக்கும் போது, தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து இவ்வாறு நடந்து கொள்வதாக அயல் வீட்டு வயோதிப பெண்ணுக்கு மகள் அறிவித்ததன் பேரில், ஊர்கஸ்மன்ஹந்திய காவற்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சந்தேகநபரான தந்தையை விசாரணைக்காக கைது செய்து பலப்பிட்டிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

மலையகத்துக்கான விஜயமொன்றை திங்கட்கிழமை (05) மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மலையக குடும்பங்களை சந்தித்தாக தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் தனது விஜயம் குறித்த புகைப்படங்களைப் பதிவிட்ட அவர், மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்திருந்தார்.

இதன்போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது, மலைநாட்டு குடும்பங்களைச் சந்தித்ததாகவும் அவர்களில் பலர் 200 ஆண்டுகால பின்னணியை கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் தடைகள் பற்றியும் கேட்டறிந்ததாக கூறியுள்ளார்.

மேலும் குறித்த மகளுக்கான சிறந்த வீடுகள், அந்த சமூகத்தின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி நேரடியாகக் கேட்டறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.