web log free
July 27, 2024
kumar

kumar

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் சமகி ஜன பலவேகய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வடக்கு கிழக்கு பிரச்சனை தொடர்பில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு ஜனாதிபதியின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறொன்றுமில்லை என்பது மிகத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியுமா என்பது சந்தேகமே என சமகி ஜன பலவேகவின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் இருந்து பதில்களை ஜனாதிபதி கோருவதாகவும், அதற்கான பிரேரணையை அரசாங்கத்தினால் சமர்ப்பித்து பதில்களைப் பெற வேண்டுமெனவும் சமகி ஜன பலவேக கருத்து தெரிவித்துள்ளது.

அரசாங்கம் தனது முன்மொழிவுகளை முன்வைத்ததன் பின்னர் எதிர்க்கட்சிகள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தயாராகவுள்ளதாக ஊடக அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுஜன பெரமுன இந்த நாட்டில் அரசாங்கத்தை உருவாக்கும் சக்தியாகும். பொதுஜன பெரமுனவில் உள்ள நாங்கள் நிச்சயமாக அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் சக்தியாக மாறுவோம். என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ,

தேர்தல் நெருங்கும்போது அடுத்த தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். நாங்கள் எங்கள் கட்சியை அங்கு அழைத்துச் செல்வோம். தேர்தல் காலத்தில் கூட்டணி குறித்து பேசப்படுகிறது. எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எமது பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து முடிவெடுப்போம். இந்த நேரத்தில், இந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். சஜித் பிரேமதாச வந்து ஆதரவளிக்காவிட்டால், அல்லது அனுரகுமாரவின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து ஆதரவளிக்கவில்லை என்றால், பொஹொட்டுவவை ஆதரிக்காவிட்டால் இந்த நாட்டின் கதி என்ன.

ஒரு விஷயத்தை தெளிவாக்குவோம். இந்த நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். இந்த விடயத்தில் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லாத நிலையில் நாட்டை அரசியல் ரீதியாக சீர்குலைத்தால் நாடு எங்கே போகும்? அப்படி நடந்தால் அந்த போராட்டம் என்ற போர்வையில் இந்த நாட்டை சீர்குலைக்க காத்திருப்பவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவோம். 

இது ஒரு ஜனநாயக நாடு என்று நாங்கள் நம்புகிறோம். தேர்தல் அரசாங்கத்தின் நிதி நிலைமை நியாயமான சூழ்நிலைக்கு மாற வேண்டும். அதுவரை அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டும். நான் எப்பொழுதும் கூறுவது போல் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முதலாளித்துவ வர்க்க பொருளாதாரக் கொள்கைகளின் பலன்களை எமது மக்களுக்கு வழங்குவதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம் என்றார். 

தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தமக்கு மாத்திரமன்றி முன்னைய ஏழு நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கும் இல்லை எனவும், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு அழைக்கப்பட்டது.

அத்துடன், நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கு மட்டுமே உள்ள தன்னால் தனியாக அந்தப் பணிகளை மேற்கொள்ள முடியாது எனவும், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து எம்பிக்களும் ஒன்றிணைந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாணசபைகள் பெரும்பான்மையான சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் மாகாணசபை முறைமையை பேண நினைத்தால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

மாகாண சபைகளுக்குச் சொந்தமான பல விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ளதால் அந்த அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளில் அடிமட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டிற்கான கொள்கைகளை மத்திய அரசாங்கம் வகுக்க வேண்டுமெனவும், அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன். சுமந்திரன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, கெவிது குமாரதுங்க, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, ஜி.எல். பீரிஸ், அத்துரலியே ரதன தேரர், வீரசுமண வீரசிங்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, சி.வி. விக்னேஸ்வரன், லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன், கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

இரட்டையர்களான சிறுமிகள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முந்தல் மங்கலஎலிய பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது 7 மாத வயதுடைய இரண்டு இரட்டைப் பெண் குழந்தைகளே காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, ​​நேற்று (ஜூலை 25) முதல் இருவரும் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குழந்தைகளின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

60 வயதுடைய மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்தவர்கள் பொலிஸ் உத்தியோகத்தரை கட்டி வைத்து றம்புக்கனை  பொலிஸ் நிலையத்திற்கு  அறிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக றம்புக்கன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் றம்புக்கன பொலிஸ் பிரிவில் கடமையிலிருந்த பொலிஸ் சர்ஜன்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத டைனமைட் மீன்பிடி நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத மீன்பிடியானது மீன்வளத்தை மட்டுமன்றி ஏனைய மீனவர்களையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதென கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கடற்படை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண கலந்துரையாடப்பட்டது.

இந்த சட்டவிரோத முறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்த ஆளுநர், மீனவர் சங்கங்கள் கடற்படையினருக்கு தகவல்களை வழங்குவதுடன் மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.  

லிந்துலை பெரிய ராணி வத்தை பகுதியில் தோட்டத்தொழிலாளர்கள் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரலில் 10 வீடுகள் தீக்கிரையாகி 40 பேர் நிர்கதியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 475 யு கிராம சேவகர் பெரிய ராணிவத்தை இலக்கம் 01 தொடர் குடியிருப்பில் நேற்று இரவு (25) ஏற்பட்டுள்ளது.
 
பிரதேசவாசிகள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த போதிலும் தீ பரவல் காரணமாக 10 வீடுகள் வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
 
எவருக்கும் உயிர் சேதங்களோ காயங்களோ ஏற்படாத போதிலும் அத்தியாவசிய ஆவணங்கள், உடுதுனிகள், தளபாடங்கள் உட்பட உடைமைகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
 
இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர் தோட்டத்தில் உள்ள அம்மன் ஆலயத்திலும் கிருஸ்தவ தேவாலயத்திலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளன.
 
குறித்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன் தீ விபத்துக்கான காரணத்தினையும் ஏற்பட்ட தீ சேத விபரங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

முட்டை ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. 

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில்  35 ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதி செய்யப்பட்ட முட்டைகள் 40 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீர் பெர்ணான்டோ  தெரிவித்தார். 

சமகி ஜன பலவேகவில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார பற்றிய தகவல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த இரண்டு எம்.பி.க்களும் இனி சமகி ஜன பலவேகவின் உறுப்பினர்கள் அல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அக்கட்சி அறிவிக்கும் என பேச்சாளர் தெரிவித்தார்.

அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்க உள்ளது.

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அதிகளவு தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கோட்பாடு புத்தகத்தின்படி புத்திக்க பத்திரனவினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணைகளின் எண்ணிக்கை 10 ஆகும்.

அதனையடுத்து, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அதிக முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளார்.

அவர் சமர்ப்பித்துள்ள தனியார் சபை முன்மொழிவுகளின் எண்ணிக்கை ஆறு.

மேலும், ஜூலை 24ஆம் திகதி வெளியிடப்பட்ட கோட்பாட்டுப் புத்தகத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, சாகர காரியவசம், பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோகில ஹர்ஷனி குணவர்தன ஆகியோரும் தலா ஒரு தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை உள்ளடக்கியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் முன்மொழிவுகளில், உள்ளூராட்சி நிறுவனங்களில் கழிவுகளை அகற்றுவதை முறைப்படுத்துதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நலன்புரிதல், வீழ்ச்சியடைந்த நிதி நிறுவனங்களை புனரமைத்தல் போன்ற யோசனைகள் விவாதிக்கப்பட உள்ளன.

புத்திக்க பத்திரன எம்.பி.யின் தனிப்பட்ட முன்மொழிவுகளில் தீவு முழுவதும் முதியோர் பராமரிப்பு வாரியங்களை விரிவுபடுத்துதல்,  மாணவர்களின் மதிப்பை சமூகமயமாக்குதல் மற்றும் ராவண மன்னன் குறித்து முறையான ஆய்வு நடத்துவதற்கான முன்மொழிவு ஆகியவை அடங்கும்.

இந்த முன்மொழிவுகள் எதிர்காலத்தில் விவாதிக்கப்படும்.