web log free
September 08, 2024
kumar

kumar

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் “Glocal Fair 2023″ என்ற நடமாடும் சேவை எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதனுடன் இணைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இதன் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று சட்டவிரோத ஆள் கடத்தல் தடுப்பு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறை அலவி, யாழ்ப்பாணம், குருநாகர் போன்ற பகுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான வசதிகளுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து சேவைகளையும் சமகால அரசாங்கம் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு இல்லாமல் சமமாக நடத்துகிறது என்ற செய்தியை முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் “Glocal Fair 2023” அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

விஞ்ஞான பாடத்தை கற்பிக்கும் போது 12 வயது பாடசாலை மாணவியின் மார்பகத்தை தொட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்ட அதிபர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அதனால் அதிபருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய  சிறைதண்டனை விதித்து அநுராதபுரம் நீதவான், மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். 

இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிபருக்கு நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய மேலும் உத்தரவிட்டார்.

தற்போதும் அதிபர் பதவியில் உள்ள காமினி சோமரத்ன என்ற அதிபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டார்.

12 வயது சிறுமியின் மார்பகத்தை 20016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்தில் தொட்டு இந்த குற்றச் செயலைச் செய்ததற்காக குற்றவியல் சட்டத்தின் 345 ஆம் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அதிபருக்கு எதிராக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் வழக்குத் தாக்கல் செய்தது.  

ஹொரணை, எட்டுகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு போதைப்பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் வந்து நான்கு மாதக் குழந்தையை பத்து வயதுக் சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது மகன் வீட்டில் தனியாக இருந்த போது, ​​ஒரு நபர் சிசுவுடன் வந்து, தனது மகனுக்கு சிசுவை கொடுத்துவிட்டு விரைவில் வருவேன் என்று கூறிவிட்டு, இரண்டு மணி நேரத்துக்கு மேலாகியும், அந்த நபர் வரவில்லை என சிறுவனின் தாய் தெரிவித்ததாக ஹொரணை பொலிஸ் பரிசோதகர் நேற்று (11) மாலை தெரிவித்தார். 

பொலிஸ் பரிசோதகர் உடனடியாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பாளர் எல்.டி.லியனகே உட்பட அதிகாரிகள் குழுவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சிசுவை மீட்தாக தெரிவித்தார்.

சிசுவை ஹொரண ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பத்து வயது சிறுவனை காவலில் வைத்து தப்பியோடிய நபர் தீவிர போதைக்கு அடிமையானவர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுவை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

U என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று அந்த நாடுகளில் அனுபவம் பெற வேண்டும் என்பதே  எண்ணம் என்றும் அவர் கூறினார்.

இலங்கை அனைத்து தரப்பிலும் பின்தங்கிய நிலையில் உள்ளதாகவும், இலங்கையர்கள் புதையல் மீது அமர்ந்து பிச்சை எடுக்கும் தேசம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதிக்கு செலுத்திய 70 கோடி ரூபாய்க்கு தோட்டத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் வழங்கிய தகவலில் உள்ள முரண்பாடுகள் காரணமாக கணக்கு காட்ட முடியாமல் உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை மேற்பார்வை நாடாளுமன்றக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, பல பெருந்தோட்டக் கம்பனிகள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.

சில நிறுவனங்கள் ஊழியர்களின் சேமலாப நிதிக்கு பெரும் தொகை நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியிருப்பதாகவும் குழு குறிப்பிடுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு ஜூன் 22ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கூடிய போது இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன.

இக்குழுவின் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி, தொழிலாளர்களைப் பாதுகாத்து, தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப  நிதி மற்றும் தற்போதைய மாதாந்திர கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இலக்கத்தின்படி கணக்குகளை ஆரம்பிப்பதன் மூலம் ஒரே நபருக்கு பல கணக்குகளை வைத்திருக்கும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும், இது தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்படுமாறும் குழு அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.மரிக்கார், இஷாக் ரஹ்மான், மஹிந்தானந்த அளுத்கமகே, வடிவேல் சுரேஸ், வேலு குமார், சுஜித் சஞ்சய் பெரேரா, எம். உதயகுமார், கலாநிதி சீதா ஆரம்பேபொல சந்திம வீரக்கொடி மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் துஷார இந்துனில், தொழிலாளர் ஆணையாளர், மத்திய வங்கி மற்றும் ஊழியர் நலன் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தோட்டத்திலுள்ள பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, ஜகத் புஷ்பகுமார, சுரேந்திர ராகவன், சாமர சம்பத் திசாநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ள 8 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால், அதன் பின்னர் உருவாகும் அரசாங்கத்தின் கீழ் ஹனாதிபதியுடன் இணைந்து நாட்டுக்காக செயற்படுவதற்கு சமகி ஜனபலவேக தயார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கலைத்து விட்டு சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்து சஜித் பிரேமதாசவை பிரதமராக்க முடியும் எனவும் இவ்வாறான பின்னணியில் ஆணை பெற்று ஆட்சி அமைக்க சமகி ஜன பலவேகய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யாமல் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட குழுவுடன் இணைந்து நிற்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 28 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை கடத்த முற்பட்ட வர்த்தகர்கள் இருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

விமான நிலைய வருகை அறையில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய இரு வர்த்தகர்களும் அடிக்கடி நாட்டிற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு உள்ளூர் சந்தையில் பொருட்களை விற்கிறார்கள்.

இரண்டு சந்தேக நபர்களும் இன்று அதிகாலை 2.20 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானமான AI-273 இல் BIA க்கு வந்துள்ளனர்.

PNB அதிகாரிகள் 01 கிலோ 780 கிராம் எடையுள்ள இந்த நகைகளை அவர்களது பொதிகளில் அடைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

சந்தேகநபர்கள் மற்றும் நகைகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் நீரில் மூழ்கி இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையின் வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்தில் இருவரும் தங்கள் உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அங்கு தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்து 60 வயதுடைய தந்தையும் தண்ணீரில் குதித்துள்ளார்.

எனினும் இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உலக நாடுகளின் போராட்டங்களினால் பல  வீழ்ச்சியடைந்து பல வருடங்களாக அராஜகமாக இருந்த போதிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் கொடுத்து ஒரு வருட குறுகிய காலப்பகுதியில் இலங்கையை மீட்க வழிவகுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு, பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்ட நாளாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது என்பதை நினைவுகூர்ந்த எம்.பி., இந்தப் போராட்டத்தில்  கிளர்ச்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல் இன்று நீதிமன்றச் செயற்பாட்டின் மூலம் வெளிப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 

ஸ்திரமான நாடு - அனைவரும் ஒன்றுபடுவோம் என ஜனாதிபதி ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுஜன ஐக்கிய பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றார். இதைக் குறிப்பிட்ட மகிந்தானந்த அளுத்கமகே, ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் சகலரையும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.