web log free
February 01, 2026
kumar

kumar

ஐக்கிய மக்கள் சக்தியின் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன நேற்று (29) தெரிவித்தார்.

இந்த எம்.பிக்கள் குழு பல்வேறு வழிகளில் ஜனாதிபதியின் உடன்படிக்கையை வழங்கியுள்ளதாகவும் முன்னாள் எம்.பி. கூறினார். 

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வார்கள் என தனக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாகவும் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த எம்.பி.க்கள் குழு அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, காலியில் உள்ள சுற்றுலா ஹோட்டல்களுக்குச் சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்தி வெளிநாட்டினரை பயமுறுத்தி சுற்றுலா வர்த்தகத்தை உடைக்க மக்கள் விடுதலை முன்னணி முயற்சிப்பதாகவும் லக்ஷ்மன் விஜேமான்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

மிரிஸ்ஸ மற்றும் யால பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி சுற்றுலா வர்த்தகத்தை சீர்குலைக்க ஜே.வி.பி தலைவர்கள் முயற்சித்ததாகவும் முன்னாள் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். 

கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக காத்திருக்க முடியாத ஜே.வி.பி தலைவர்கள் பாசாங்குத்தனமாக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்துள்ள பணக்கார வெளிநாட்டவர்களால் சுற்றுலா விடுதிகள் நிறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பேருவளை பிரதேசத்தில் இருந்து 34 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பேருவளை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேச மக்களால் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலநடுக்கங்களால் சுனாமி அபாயம் இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

டீசல் விலை குறைந்துள்ள போதிலும், புகையிரதக் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.

பேருந்து கட்டணத்தை ஒப்பிடும் போது ரயில் கட்டணங்கள் 50 வீதம் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னதாக  4ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதாகவும், அன்றைய தினம் அவர்களில் ஒரு குழு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் பல சந்தர்ப்பங்களில் இந்தப் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாற்றம் ஏற்பட்டால் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் அபாயம் உள்ளது. 

எரிபொருள் விலை குறைக்கப்பட்டமைக்கு அமைய முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (29) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஒரு கிலோ மீற்றருக்கு 20 ரூபாவினால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

இரண்டாவது கிலோமீட்டரை 80 ரூபாவில் ஓட்டுவது தொடர்பான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார். 

எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, எஞ்சிய பேருந்து கட்டணங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளன. 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் (92) 60 ரூபாவால் குறைக்கப்படும். பெட்ரோல் (95) 135 ரூபாவினால் குறைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒட்டோ டீசல் லிட்டருக்கு ரூ.80 குறைக்கப்படும் என்றார். சூப்பர் டீசல் ரூ. 45இல்  குறைக்கப்படும். 

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 10 ரூபாவால் குறைக்கப்படும். 

புதிய விலைகள்:

லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் - ரூ. 340
லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் - ரூ. 375
லங்கா ஆட்டோ டீசல் - ரூ. 325
லங்கா சுப்பர் டீசல் - ரூ. 465

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

அதன்படி, CPC மற்றும் அரசு ஆகிய இரண்டும், தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளன, இதன் மூலம் பொதுமக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விரைந்து செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், விநியோகம் வழமைபோல் தொடரும் என்றும் உறுதியளித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிபுணர்கள் குழுவொன்று அண்மையில் ஜனாதிபதியை சந்தித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் 17வது சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா தனது 81வது வயதில் காலமானார்.

ஜா-எலவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் காலமானார். 

இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தராக செயற்பட்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd