web log free
November 28, 2025
kumar

kumar

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்குவதற்கு திறைசேரிக்கு தகுதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட விசாரணையின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான கடமைகளை ஆரம்பிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு 770 மில்லியன் ரூபாவை கோரிய போதிலும், இதுவரை நிதியமைச்சு அந்த தொகையை வழங்கவில்லை.

வெல்லவாய நகருக்கு அருகில் இன்று (11) காலை 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மொனராகலை மற்றும் புத்தளயை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களை ஆய்வு செய்வதற்காக இரண்டு புவியியலாளர் குழுக்கள் அந்த பகுதிகளுக்கு சென்றதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

மொனராகலை, புத்தள, வெல்லவாய, கும்புக்கன, ஒக்கம்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் நேற்று (10) பிற்பகல் இரண்டு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

எனினும் இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கத்தை தாங்கள் உணரவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஆறு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வலம்புரி சங்கு ஒன்றினை நுவரெலியா அதிரடிப் படையிரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு (10) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ஸ்ரதன் பகுதியில் சுருவத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று இரவு குறித்த வீட்டினை சோதனை செய்த போது மிகவும் சூட்சுமமான முறையில் அரிசி பாத்திரம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வலம்புரி சங்குடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த வலம்புரி சங்கினை ஆறு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வலம்புரி சங்கு மற்றும் சந்தேக நபர்கள் இன்று (11) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று  பள்ளத்தில் விழுந்து இன்று (10) விபத்து ஏற்பட்டுள்ளது.

இரத்தினபுரி - சிறிபாகம வீதியில் இந்துருவ - மஹவங்குவாவிற்கு அருகில் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்து கிலிமெல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமானதால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மொனராகலை - புத்தல வெல்லவாய பகுதியில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இது 3 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் என்றும், அச்சப்படத் தேவையில்லை என்றும் மையம் அறிவித்துள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தாக்கல் செய்த ரிட் மனு, உச்ச நீதிமன்றத்தால் இன்று பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தேசிய தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டபடி நடத்துவதற்கு இலங்கையின் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க தேசிய தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே முன்னெடுத்துள்ள நிலையில், இந்த விடயத்தில் உத்தரவுகள் அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுபடியாகாத ரிட் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தர உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், நிதிச் செயலாளர், பிரதமர், அமைச்சரவை செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும், மேற்படி மனுவை பரீட்சைக்கு எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றத்தை நிராகரிக்குமாறு கோரி SJBயின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமான் பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் ஆகியோரால் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேலும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரினால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும், சட்டத்தரணி சுனில் வட்டகல, எரங்க குணசேகர, மற்றும் வி.சந்திரசேகரன் ஆகியோர் இடைத்தரகர்களாக மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அதன்படி, மேற்கூறிய மனுக்களை தொடர வேண்டாம் என உச்ச நீதிமன்ற அமர்வு முடிவு செய்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் எவ்வித அடிப்படையும் இன்றி தம்மை கைது செய்ய முயற்சிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிடுகின்றார்.இன்று புலனாய்வு அமைப்புகள் தனக்குப் பின்னால் இருப்பதாகவும், இது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கூட தலையிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர, சமகி ஜன பலவேயவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தனக்கு வெறுப்பு இருப்பதாகவும், அவர்கள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

தனது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் உரையாற்றும் விதத்தில் பிரச்சினை இருப்பதை தானும் ஒப்புக் கொள்வதாகவும் அதனை சஜித் பிரேமதாசவிடம் நான் அதை சொல்லியிருக்கிறேன் .என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்

தலதா மாளிகையின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், 50 கோடி மதிப்புள்ள தங்கமும், ஒன்பது கோடி மதிப்பிலான நிலமும் விற்று மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவிடம் பணத்தை எடுத்துச் செல்வதற்காக மூட்டைகளை கட்டியது தானே என்றும், அதையும் தியவதன நிலமே எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறுகிறார்.

இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வந்த குழுவினருடன் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததோடு, அவற்றை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இலங்கைப் பிரஜைகளுக்கான முழு நிதியுதவியுடன் கூடிய சுமார் 200 புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை பல்வேறு மட்டங்களில் இருந்து கோருகிறது.இந்த புலமைப்பரிசில்கள் 2023-2024 கல்வி அமர்வுக்கானது.

இந்த உதவித்தொகை வழங்கப்படும் திட்டங்கள்:

1 ) நேரு நினைவு உதவித்தொகை திட்டம்: இந்த திட்டம் பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், மற்றும் கலை போன்ற பல்வேறு களங்களில் இளங்கலை/முதுகலை மற்றும் பிஎச்டி படிப்புகளை உள்ளடக்கியது.

2) மௌலானா ஆசாத் ஸ்காலர்ஷிப் திட்டம்: பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயப் படிப்புகளுக்கு முன்னுரிமையுடன் முதுகலை பட்டப் படிப்புகள்.

3) ராஜீவ் காந்தி உதவித்தொகை திட்டம்: இளங்கலைப் படிப்புகள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில், இளங்கலை பொறியியல் மற்றும் இளங்கலை தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கும்.

மேற்கூறிய திட்டங்களில் ஒவ்வொன்றும் பாடநெறியின் முழு காலத்திற்கான முழு கல்விக் கட்டணம், மாதாந்திர சத்துணவு கொடுப்பனவு மற்றும் புத்தகங்கள் மற்றும் நிலையானவற்றுக்கான வருடாந்திர மானியம் ஆகியவற்றை உள்ளடக்கியது. கூடுதலாக, இந்தியாவின் அருகிலுள்ள இடத்திற்கான விமானக் கட்டணம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான கல்விச் சுற்றுப்பயணங்களுக்கான வருடாந்திர மானியம், பல துணைப் பலன்களைத் தவிர. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த வளாகத்திற்குள் விடுதி வசதியும் வழங்கப்படும்.

இந்த பிறநாட்டு புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் சிறந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்கிறது. விண்ணப்பதாரர்கள் தேர்வு இலங்கை அரசின் கல்வி அமைச்சுடன் கலந்தாலோசிக்கப்படுகிறது. கல்வி அமைச்சின் www.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் தேவையான விபரங்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் தேர்வு நடைமுறைகள் பற்றி மேலும் அறிய, இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பு அல்லது கல்வி அமைச்சு அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd