இவ்வருடம் டிசெம்பர் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்துவதன் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரண்டாம் தடவைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் குற்றம் சுமத்துகின்றனர்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட 6 மாதங்கள் ஆனதாகவும், 3 மாதங்களில் மீண்டும் அதே பரீட்சையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார். அத்துடன் இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் கடந்த ஆட்சியில் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க இதன்போது வருத்தம் தெரிவித்தார்.
அந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் ஜப்பான் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் ஜப்பான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் இதற்கமைய எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை இலங்கையில் மேற்கொள்வது குறித்து ஆராய தயாராக இருப்பதாகவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி இதன்போது தெரிவித்தார்.
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தேர்ச்சியுற்ற தொழிலாளர் பரீட்சையை 2023 ஜனவரியில் ஜப்பான் ஆரம்பிக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஜப்பான் வழங்கி வரும் ஒத்துழைப்பைப் பாராட்டிய ஜனாதிபதி , ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்காக மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்தை வரவேற்ற ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், சர்வதேச அரங்கில் ஆசியாவிற்கு வலுவான பிரதிநிதித்துவம் தேவை என்றும் வலியுறுத்தினார்.
பாணந்துறை மற்றும் கம்பளை பல்வேறு சேவை கூட்டுறவு சங்க தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி பாணந்துறை பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச் சபையில் 87 ஆசனங்களில் 53 ஆசனங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியது.
கம்பளை பல்வேறு சேவை கூட்டுறவு சங்க தேர்தல்களில் மொட்டு ஆதரிக்கும் குழு 34 வாக்குகளையும், ஆறு பணிப்பாளர் பதவிகளையும் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிக்கு ஒரே ஒரு இயக்குனர் பதவி மட்டுமே கிடைத்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கான விஜயத்திற்காக இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.
மேலும் 15 பேர் ஜனாதிபதியுடன் தூதுக்குழுவாகச் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை 12.50 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் SK-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு, அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அந்தக் குழுவினர் ஜப்பானில் உள்ள டோக்கியோ சர்வதேச விமான நிலையத்துக்கு புறப்படுவார்கள்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இந்தக் குழுவினர் ஜப்பான் சென்றுள்ளனர்.
பிரித்தானியா மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதியின் முதலாவது வெளிநாட்டு விஜயம் அமைந்திருந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பணத்தை இறைத்து செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரச்சாரப் பொறிமுறையின் வலைக்குள் முழு நாட்டையும் இழுத்து, ஒரு அவல நிலையாக வங்குரோத்து நாடாக உருவெடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.
இவ்வாறான மந்தமான அரசியல் அமைப்புடன் அதிகாரம் பெற்ற மாவீரன் இந்த நாட்டில் அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இரண்டாம் கட்டமாக பொம்மை ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி சிறந்ததைச் செய்ததாகச் சொல்லி நாட்டை அழிவுக்குத் தள்ளினார் என்று கூறும் சஜித் பிரேமதாச, இன்று அதன இரண்டாம் கட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
கொழும்பு மாவட்ட கெஸ்பேவ தொகுதி கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2018-2019 ஆண்டுகளில் மத்திய கலாச்சார நிதியம் சட்டத்தை மீறி 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களை தொல்லியல் துறைக்கு பணியமர்த்தியுள்ளது என்று தேசிய தணிக்கை அலுவலகம் கூறுகிறது.
இவர்களின் சம்பளத்திற்காக 106 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனமொன்றின் சார்பில் ஊழியர்களை பணியமர்த்துவதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாததன் அடிப்படையில் இந்த நிறுவனம் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது இந்த அமைச்சு சஜித் பிரேமதாசவின் கீழ் இருந்தது.
கொழும்பு நகரில் நாளாந்தம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பத்தரமுல்லை தியத்த உயன மற்றும் அக்கொன ஹெயினடிகும்புர முதல் வெள்ளவத்தை வரை சூரிய மின்கலங்கள் மூலம் செயற்படுத்தப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணிகள் படகு சேவை கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
நில மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஜென்சோ பவர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் இணைந்து இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணிகள் படகுச் சேவையைத் தொடங்கியுள்ளன.
அங்கு உரையாற்றிய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலங்கையில் சோலார் பேனல்கள் மூலம் இயக்கப்படும் முதலாவது படகு சேவை இந்த பயணிகள் படகு சேவையாகும் என குறிப்பிட்டார்.
சோலார் பேனல்கள் மூலம் இயக்கப்படுவதால் இது 100 சதவீதம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்காலத்தில் கொழும்பு நகரின் உள்ளக நீர்வழிப் பாதைகளில் இவ்வாறான படகுச் சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் எனவும் தெரிவித்தார்.
சோலார் பேனல்கள் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் தற்போதைய எரிபொருள் பிரச்சினைக்கும் நாடு எதிர்நோக்கும் மின்சார நெருக்கடிக்கும் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சோலார் பேனல்கள் மூலம் இயங்கும் இந்தப் படகுகள் ஓடும்போது சத்தம் எழுப்பாது, எரிபொருளை உட்கொள்ளாது. நீர்வாழ் தோட்டத்தில் சுற்றித் திரியும் நீர்வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கைச் சுழற்சி தொந்தரவு செய்யாது.
பத்தரமுல்லை நீர் பூங்கா மற்றும் ஹெயினடிகும்புரவிலிருந்து வெள்ளவத்தை வரை இந்தப் படகுகள் 30 நிமிடங்களுக்குள் சென்றடைய முடியும்.
மேலும், பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை ஒரு நபருக்கு 200 ரூபாவும், அகோன, ஹெயினடிகும்புர முதல் வெள்ளவத்தை வரை ஒரு நபருக்கு 300 ரூபாவும் அறவிடப்படுகிறது.
இந்த படகு சேவையானது தினசரி அலுவலக நேரங்களில் இயங்கும் மற்றும் ஒரு படகில் 8 பேர் பயணம் செய்வதற்கான போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது.
மேலும், பத்தரமுல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், கேட்வே சர்வதேச பாடசாலை, நாவல திறந்த பல்கலைக்கழகம், 176 பஸ் பாதை, 138 மற்றும் 122 பஸ் பாதைகள், வெள்ளவத்தை புகையிரத நிலையம் ஆகிய இடங்களுக்கு இந்த படகு சேவை மூலம் இலகுவாக சென்றடைய முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கும் சமயத்தில் பணியாற்றுவதற்காக, தனக்குக் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.
குறித்த அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களே இவ்வாறு பதில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக ராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தொழில்நுட்ப பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பெண்கள் சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக ராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபரை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் கொலன்னாவ சாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த கணேசன் யோகன் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று நாட்களாக தொலைபேசி ஊடாக பணம் கேட்டு மிரட்டியதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த சந்தேகநபர் அயோமா ராஜபக்ஷவுக்கு 30 முறை அழைப்பு விடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு தவறுதலாக விடுக்கப்பட்டதாக கருதிய முன்னாள் கோட்டாபய ராஜபக்சவின் செயலாளர் ஒருவர் தகவல் கிடைத்ததும், தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு அழைப்பு எடுத்து உண்மைகளை விளக்கினார்.
இதுபற்றி அறிந்தே தான் இப்படி தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் 10 கோழி , நாய் என்பற்றை தீருடிச்சென்ற உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 5 பாடசாலை மாணவர்களை கைது செய்து அவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களை எச்சரித்து விடுவித்துள்ள சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியரின் வீட்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு உள்நுழைந்த 5 மாணவர்கள் வீட்டின் பின்பகுதியில் அமைந்துள்ள கோழிக் கூட்டில் இருந்த 10 கோழிகளை திருடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த நாய் ஒன்றையும் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இது தொடர்பாக வைத்தியர் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் வைத்தியரின் வீட்டுக் கோழிகளை திருடிச் சென்ற பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்றுவரும் 5 மாணவர்களை கைது செய்தனர்.
வைத்தியர் அவர்களை மன்னித்துவிடுமாறு கோரியதையடுத்து மாணவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து கைது செய்யப்பட்ட மாணவர்களை எச்சரித்து பிள்ளைகளை கவனிக்குமாறு பெற்றோருக்கு அறிவுரை கூறி விடுவித்துள்ளதாக தெரிவித்தனர்.