web log free
February 13, 2025
kumar

kumar

இந்தியாவின் இசைக்குயில் என்று புகழப்பெற்ற பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர் 36 மொழிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

லதா மங்கேஷ்கர் தமிழில் பாடல்கள் பாடியுள்ளார். 1952-ம் ஆண்டு வெளியான இந்தி படமான ‘ஆன்’ தமிழில் ‘ஆன் முரட்டு அடியாள்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் லதாமங்கேஷ்கர் 4 பாடல்களை பாடி இருந்தார். 1955-ம் ஆண்டு இந்தி படமான ‘உரன் கடோலா’ தமிழில் ‘வன ரதம்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இதில் ‘எந்தன் கண்ணாளன்’ என்ற பாடலை பாடி இருந்தார்.

அதன்பின் 1987-ம் ஆண்டு லதா மங்கேஷ்கர் நேரடியாக தமிழ் படத்தில் பாடல்கள் பாடினார். இளையராஜா இசையில் பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்தில் ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலை பாடினார். இந்த பாடல் பிரபலமானது. 1988-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ படத்தில் ‘வளையோசை....கலகலவென’ பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியனுடன் இணைந்து பாடினார். அதே ஆண்டு கார்த்திக் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் என்ற பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து பாடி இருந்தார்.

தமிழில் லதா மங்கேஷ்கர் நேரடியாக பாடிய பாடல்களுக்கு இளையராஜா தான் இசை அமைத்துள்ளார். இந்தியில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பல்வேறு படங்களில் லதா மங்கேஷ்கர் பாடி உள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெற்றோல் 184 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் ஒரு லீட்டர் டீசலின் விலையும் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 124 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

 

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான பரீட்சார்த்திகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை கொவிட் சிகிச்சை மையங்களுடன் இணைந்து மாவட்ட அளவில் குறித்த பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தகைய விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்பட்ட சிறப்பு பரீட்சை மையங்களில் தங்கியிருந்து தேர்வு எழுத வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் நினைவாக இரண்டு நாட்கள் தேசிய துக்கம் தினம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. தேசியக் கொடி இரண்டு நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஸ்கர் அவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது

நாடு முழுவதும் இருந்து அஞ்சலிகள் குவித்தவாறு உள்ளன . ட்வீட்டில் புகழ்பெற்ற பாடகியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். "நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறேன். அன்பான மற்றும் அக்கறையுள்ள லதா திதி நம்மை விட்டுப் பிரிந்தார். அவள் நம் நாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்கிறாள். வரும் தலைமுறையினர் அவரை இந்திய கலாசாரத்தின் தலைசிறந்த வீராங்கனையாக நினைவு கூர்வார்கள், அவரது மெல்லிசை குரல் மக்களை மயக்கும் இணையற்ற திறனைக் கொண்டிருந்தது,” அவர் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

அவுஸ்திரேலியாவிடம் இருந்து 221 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

முக்கியமாக பருப்பு மற்றும் பார்லி கொள்வனவு செய்ய கடனைப் பெறுவதாக கூறிய அவர், மீதமுள்ளவை மற்ற அத்தியாவசியப் பொருட்களுக்குப் பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.

எதிர்வரும் புத்தாண்டு காலம் உட்பட அடுத்த சில மாதங்களுக்கு இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்தியாவினால் ஒரு பில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், சீனாவிடம் இருந்து ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கு சீனா இணங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். மத்திய மந்திரி நிதின் கட்காரி அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் லதா மங்கேஷ்கர் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

இன்றைய நாள் எப்படி?  

ஞாயிற்றுக்கிழமை, 6 பெப்ரவரி 2022 தை 24

சஷ்டி விரதம்.

நல்ல நேரம்
காலை: 6:00AM - 7:00AM
மாலை: 2:00PM - 3:00AM
இராகுகாலம்
மாலை: 4:30AM - 6:00AM
இரவு: 7:30PM - 9:00PM
குளிகை
மாலை 3:00PM 4:30PM
இரவு 9:00PM 10:30PM
எமகண்டம்
பகல்: 12:00PM - 1:30PM
இரவு: 6:00PM - 7:30PM
திதி
பஞ்ஜமி, காலை 7:31AM
நட்சத்திரம்
ரேவதி, இரவு 8:41PM
சந்திராஷ்டமம்உத்ரம்,அஸ்தம்.
பரிகாரம்வெல்லம்.
சூலம்மேற்கு
மேஷம்
aries-mesham
பெண்கள் செய்யும் வீண் செலவால் விரக்தி ஏற்படும். கோபத்தால் வீண்வம்பை விலைக்கு வாங்காதீர்கள். எதிர்பாராத இட மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
ரிஷபம்
taurus-rishibum
பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றம் கிடைக்கும். புதிய நண்பர்களின் உதவியால், வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பாரக்கலாம். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். மனதில் நிம்மதியும், உடலில் ஆரோக்கியமும் பெருகும்.
கன்னி
virgo-kanni
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். காரிய வெற்றிகள் களிப்பைத் தரும். தன்னம்பிக்கை கூடும். அரசு மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவால் நன்மைகள் நடக்கும்.
மகரம்
capricorn-magaram
குழந்தைகளால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். துணைவியின் ஒத்துழைப்பால் துன்பம் தீரும். தனலாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
கடகம்
cancer-kadagam
தெய்வீக ஈடுபாடு, தானதரும சிந்தனைகள் அதிகரிக்கும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். இனிய பயணங்கள் இன்பம் தரும். புத்திர பாக்கியம் ஏற்படலாம்.
சிம்மம்
leo-simmam
வழக்கு வியாஜ்யங்களை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிந்து நடந்தால் தண்டனைகளைத் தவிர்க்கலாம். நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும்.
துலாம்
libra-thulam
அனைத்து விதத்திலும் ஆதாயம் அடைவீர்கள். பயணத்தால் பயனடைவீர்கள். புதிய தோழியின் நட்பால் மனமகிழ்ச்சி ஏற்படும். வீடு, மனை வாங்கும் விரும்பங்கள் நிறைவேறும்.
மீனம்
pisces-meenam
பெயரும், புகழும் உயரும். பணவரவு உண்டு. பெரியோர் பாசம் காட்டுவர். மனதில் திருப்தி, மகிழ்ச்சி, வியாபாரத்தால் போதிய பணவரவு என யோகங்கள் தரும் நாள்.
தனுசு
sagittarius-thanusu
நிம்மதி குறைவதால், நித்திரை குறையும். வீட்டில் பொருட்களை மிகுந்த பாதுகாப்புடன் வைத்தால் இழப்பைத் தவிர்க்கலாம். அன்னைக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பயணத்தின் போது தடங்கல் ஏற்படலாம். குழந்தைகளுக்குச் சிறு உபாதைகள் ஏற்படலாம். உங்கள் திறமையால் பல சாதனைகள் புரிந்தாலும் நல்ல பெயர் கிடைக்காது.
கும்பம்
aquarius-kumbam
பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மேலதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் மேன்மை அடையலாம். பிறரிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

எதிர்காலத்தில் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் பல கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

 எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும், அரசாங்கத்தில் இருந்து விலக தாம் தயாரில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான். 

உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இயந்திரங்களின் உதவியுடன் நிலத்தை தோண்டும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர். சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. விழுந்தவுடன் என்னை தூக்குங்கள் என சிறுவன் அழுததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். 

செல்போன் கேமிரா மூலம் அவன் இருந்த பகுதியை கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது. அந்த சிறுவன் மீட்பு நடவடிக்கை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. எனினும் பாறைகள் காரணமாகவும், நிலச்சரிவு அச்சுறுத்தலாலும் பணிகள் பாதிக்கப்பட்டது. 

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவனின் உடல் மீட்பு 

மீட்பு பணி நடைபெறும் பகுதியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சிறுவன் மீட்கப்பட்டான் என்ற செய்திக்காக காத்திருந்தனர். 

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும், நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிரற்ற சிறுவன் உடல் மீட்கப்பட்டதாகவும் மொராக்கோ அரச குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் அச்சப்பன் (வயது 22) என்பவர் ஆசை வார்த்தை கூறி மாணவி வீட்டில் தனியாக இருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் அச்சப்பன் மீது போக்சோ சட்டதில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd