Print this page

பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் குவாதர் நகரில் நட்சத்திர ஹோட்டலில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுததாரிகளை தடுக்க முயன்ற ஹோட்டலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பின்னர், ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகைந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஹேட்டலில் நுழைந்த பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.