Print this page

பேருந்து விபத்தில் 23பேர் பலி

மெக்சிக்கோவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 23பேர் உயிரிழந்துள்ளதுடன், முப்பது பேர் காயமடைந்தனர்.

மால்ட்ராட்டா மலைப் பகுதியில் கத்தோலிக்க யாத்ரீகர்கள் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து, சரக்கு வாகனத்துடன் மோதியதையடுத்து, இரண்டு வாகனங்களுமே வெடித்துத் தீப்பிடித்தது.

ஒரு வாகனத்தின் வேகக்கட்டுப்பாட்டு விசை முறையாக இயங்காததே விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.