Print this page

தென்கொரியா விமானம் விபத்து 179 பேர் பலி!

December 29, 2024

181 பேருடன் இன்று காலை விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறிய விமானத்திலிருந்து இருவர் மட்டுமே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பேங்க்காக்கிலிருந்து தென்கொரியாவின் Muan airport- ல் லேண்டிங்கின் சக்கரங்கள் வெளியே வரவில்லை FACT 2024 ஆண்டின் மிகப்பெரிய விமான விபத்து இதுதான்..

அக்டோபர் நவம்பர் டிசம்பர் என்பதற்கு பதிலாக October, November, Disaster என்று டிசம்பர் மாதத்தின் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

இன்று(29) காலை தென்கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஜெஜு ஏர் பயணிகள் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி வேலியில் மோதி தீ பிடித்து விபத்து!

பாங்காக்கிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் 175 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் உட்பட மொத்தம் 181 பேர் இருந்தனர்.

அவசர சேவைகள் தற்போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, அதே நேரத்தில் விபத்துக்கான துல்லியமான காரணத்தை அறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முவான் சர்வதேச விமான நிலையம் சியோலில் இருந்து சுமார் 288 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.