Print this page

அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும், அமெரிக்க குடிமகன்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 22 April 2020 01:38