Print this page

மும்மை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்

February 14, 2019

மும்பை விமான நிலையத்தில் இந்திய ரூ.6 கோடியே 74 இலட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பை விமான நிலையத்துக்கு நேற்று மாலை டுபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது பயணபொதியின் பக்கவாட்டில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு தைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதில் 44 தங்க கட்டிகள் சிக்கின. இந்த தங்க கட்டிகளின் மதிப்பு இந்திய ரூ.6 கோடியே 74 இலட்சம் என தெரியவந்தது.

இந்த தங்க கட்டிகள் கடத்தல் சம்பவம் குறித்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Last modified on Friday, 15 February 2019 02:55