Print this page

தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை

February 16, 2019

அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலை நடத்திய நபரை அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

நேற்று மதியம், சிக்காகோவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் துப்பாக்கிச்சூட்டு இடம்பெற்றது.

அதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிக்காரர், தொழிற்பேட்டையில் பணியாற்றியதாக நம்பப்படும் 45 வயது கேரி மார்ட்டின் என்றவர். அவர் தாக்குதலை நடத்தியதற்கான காரணம் தெரியவில்லை.

Last modified on Saturday, 16 February 2019 03:21