Print this page

பிரான்சில் மர்ம மிருகத்தால் பீதியில் மக்கள்

பிரான்ஸில் உள்ள மாவட்டம் ஒன்றில் மர்ம மிருகம் காணப்பட்டதால், மக்கள் அதனைக் கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை (13) குறித்த மர்ம மிருகம் ஒன்று பிரான்ஸின் Frévent மற்றும் Auxi-le-Château நகரங்களுக்கிடையே காணப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மர்ம மிருகம் இதுவரை அடையாளம் காணப்படாததால், குறித்த மர்ம மிருகத்தை தேசிய ஜொந்தமினர், உள்ளூர் வேட்டைக்காரர்கள் உதவியுடன், பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதேவேளை குறித்த மர்ம மிருகம் சிறுத்தை அல்லது புலியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அது இராட்சத உருவில் இருந்ததால், அதையும் உறுதிபடுத்த முடியவில்லை.

இது குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சந்தேகப்படும் படி ஏதேனும் மிருகம் தென்பட்டால் உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் சிலர் கடும் பீதியில் உள்ளனர்.

Last modified on Sunday, 17 October 2021 08:42