Print this page

உருவாகவிருக்கும் "ஜவாத்" புயல்

November 27, 2021

தென் அந்தமான் தீவுகளில் அடுத்தவாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக மாறும் வாய்ப்புள்ளதாகச் சர்வதேச வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு இது ஒரு புயலாக வலுப்பெற்றால், அதற்கு “ஜவாத்” என்று பெயரிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக அடுத்த வாரம் இலங்கை மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வீழ்ச்சி ஏற்படும் எனவும் சர்வதேச வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Last modified on Saturday, 27 November 2021 09:19