இந்தியாவின், உத்தரபிரதேசத்தில் 17 பாடசாலை மாணவிகளுக்கு உணவில் போதைப்பொருள் கலந்துகொடுத்து துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 18 ஆம் திகதியன்று இரவு, செயன்முறை பரீட்சையென கூறி மேற்படி 17 மாணவிகளை, சந்தேகநபர்களான பாடசாலை முகாமையாளர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன்போது, அந்த மாணவிகளுக்கு உணவில் போதை மருந்து கலந்துகொடுத்து, மயக்கமடையசெய்த சந்தேக நபர்கள், அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மறுநாள் குறித்த மாணவிகள் பாடசாலைக்குச் செல்ல மறுத்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் விசாரித்த போது, மாணவிகளுக்கு அரங்கேறிய கொடூரம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனையடுத்து அடுத்து சந்தேக நபர்களான பாடசாலை முகாமையாளர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்த நிலையில் சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதால் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.