Print this page

பாரிய நிலநடுக்கத்தில் தத்தளிக்கும் இந்தோனேசிய மக்கள்

December 14, 2021

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று செவ்வாயன்று 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் உள்ள Maumere க்கு வடக்கே 112 கிலோமீட்டர் (69 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 10:20 மணிக்கு புளோரஸ் கடலில் 18.5 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கிழக்கு திமோர், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பூர்வாங்க நிலநடுக்க அளவுருக்களின் அடிப்படையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், "பூகம்பத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிலோமீட்டர் (621 மைல்) தொலைவில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட சாத்தியம் உண்டு" என்று கூறியுள்ளது.