Print this page

பங்களாதேஷ் படகு தீ விபத்து 37 பேர் பலி

December 24, 2021

தெற்கு பங்களாதேஷில் படகு தீப்பிடித்ததில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டாக்காவில் இருந்து பர்குனா நகருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஜலகதி நகருக்கு அருகில் உள்ள நதியின் நடுவில் இருந்தபோது, மூன்று அடுக்குகளைக் கொண்ட கப்பலில் தீப்பிடித்தது.

தண்ணீரில் குதித்த சிலர் நீரில் மூழ்கி இறந்தனர்.

Last modified on Friday, 24 December 2021 09:19