Print this page

லண்டன் ரணில் பதவி விலகினார்

 

பிரித்தானிய சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய அலுவல்கள் அமைச்சராக கடமையாற்றிய ரணில் ஜயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

செப்டம்பர் 6 ஆம் திகதி, அவர் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் அமைச்சராக பதவியேற்றார்.

பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் புதிய அமைச்சரவையை நியமிக்கத் தயாராகி வருவதால், அமைச்சர் பதவியை விட்டு விலகி பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ரணில் ஜயவர்தனவின் இராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.