Print this page

எதிர்ப்பை வெளியிட்டு எழுந்து சென்றார் சியம்பலாபிட்டி

December 05, 2022

60 வயதைத் தாண்டிய ஊழியர்களின் சேவைக் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அரசியலமைப்புச் சபையில் இருந்து எழுந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி 60 வயதை பூர்த்தி செய்யவுள்ள பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் 27 பேர் இந்த நாட்களில் சேவை நீடிப்புக்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் பெரிய பதவியில் இருப்பவர் ஒருவரும் இருப்பதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கினால், ஒட்டுமொத்த பொதுச் சேவையும் சிக்கலில் சிக்குவதைத் தடுக்க முடியாது என நிதியமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு நீட்டிக்கப்பட்ட சேவையை வழங்க முடியாது எனவும் அதனால் கீழ்நிலை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சேவைக் காலத்தை நீடிப்பதற்கான யோசனைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் இந்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.