Print this page

அதிக வளி மாசு ஏற்பட்டுள்ள நகரங்களின் பட்டியல் இதோ

December 09, 2022

நிலவும் காலநிலை காரணமாக இன்று (09) அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 60 காற்றின் தர பரிசோதனை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே கூறுகிறார்.

இதற்காக பல அரசு நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களுடன் இணைந்து செயல்படுவேன் என்றார். 

சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் வளிமண்டலத்தில் நேற்று அதிக அளவு தூசி துகள்கள் பதிவாகியுள்ளன. மேலும் மண்டவுஸ் சூறாவளி காரணமாக, இந்தியாவில் இருந்து தூசி துகள்கள் நாட்டிற்குள் பாய்ந்தது.

எனினும், தற்போதுள்ள தூசித் துகள்கள் இன்று முதல் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 1,500 கி.மீ தொலைவில் உள்ள கொழும்பு நகரிலும் இதே நிலை காணப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட பகுதியின் காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால், அது நல்ல காற்றோட்டமாகவும், அதிக மதிப்புகளைக் காட்டினால், அது மாசுபட்ட காற்று நிலையாகவும் கருதப்படுகிறது.

காற்றின் தரக் குறியீட்டில் 151ஐத் தாண்டினால், அது வலுவான மோசமான காற்று மாசு நிலையாகக் கருதப்படுகிறது.

தீவின் பல முக்கிய நகரங்களில், இன்று காலை காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்தது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக கொழும்பு இருந்தது.

இதன் காற்றின் தர சுட்டெண் மதிப்பு 246 ஆகவும், இரண்டாவது காற்றின் தர சுட்டெண் மதிப்பு 237 ஆகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் பெறுமதி 229 ஆக இருந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 226 ஆகவும் திருகோணமலை மாவட்டத்தில் 214 ஆகவும் பதிவாகியுள்ளது.

காற்றின் தர சுட்டெண்ணின் படி, களுத்துறை மாவட்டத்தில் 186, இரத்தினபுரி 166, கேகாலை 163, பொலன்னறுவை 160, பதுளை 154 மற்றும் கண்டி 151 ஆக இருந்தது.