Print this page

போர்ட் சிட்டி முதலீட்டாளர்களுக்கான புதிய விசா முறை

December 20, 2022

கொழும்பு துறைமுக நகர முதலீட்டாளர்களுக்கு மூன்று வகையான விசாக்களை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (20) தெரிவித்தார்.

இன்று அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, புதிய வீசா வகைகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்மூலம், முதலீட்டு விசா, வேலைவாய்ப்பு விசா மற்றும் CPC வதிவிட விசாக்கள் ஆகியவற்றை வெளிநாட்டவர்களுக்கு இலங்கை அறிமுகப்படுத்தும் என்றார்.

புதிய வகையான விசாக்கள் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்குத் தேவையான தயாரிப்புகளைச் செய்ய உதவும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.