Print this page

இந்தியாவில் போதைப்பொருள், ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட 9 இலங்கையர்கள் கைது

December 20, 2022

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை புதுப்பிக்கும் நோக்கில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது இலங்கையர்கள் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரஸ் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா தகவல்படி, கைது செய்யப்பட்டவர்களில் குணா என்கிற சி குணசேகரன் மற்றும் பூக்குட்டி கண்ணா என்கிற புஷ்பராஜா ஆகியோர் அடங்குவர்.

அவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் ஆயுத சப்ளையர் ஹாஜி சலீமுடன் நெருங்கிய தொடர்பில் பணியாற்றினர் என்று கூட்டாட்சி பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்தியாவிலும் இலங்கையிலும் விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக அவர்கள் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை வியாபாரம் செய்து வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Last modified on Tuesday, 20 December 2022 06:29