Print this page

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக புதிய ஜனாதிபதி செயலணி

December 21, 2022

நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க.தலைமையில் நேற்று (20) கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பில்

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஜனாதிபதி செயலணி ஒன்றிணைக்கும் என விஜயதாச ராஜபக் கூறினார்

நாட்டில் நச்சு மற்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனைக்கு எதிராக போராடுவதற்கான வேலைத்திட்டத்தையும் இது அறிமுகப்படுத்தவுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.