Print this page

நாட்டில் திடீர் ஆட்சி மாற்றம்!!

December 29, 2022

ஜனவரி 17, 2023ல் சனிப்பெயர்ச்சி கும்ப ராசியில் நடப்பதால், 2023 முதல் 6 மாதங்களில் அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்படும் என  ஜோதிட நிபுணர் கே.ஏ.யு. சரச்சந்திர கூறுகிறார்.

இதனால் ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாகவும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிய சக்தியொன்று அதிகாரத்தைப் பெற்று அந்தத் தேர்தலிலிருந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கும் எனவும் சரச்சந்திர மேலும் குறிப்பிட்டார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.