Print this page

தலதா மாளிகையை நிந்தித்தவருக்கு விளக்கமறியல்

பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் செபால் அமரசிங்கவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.