Print this page

இலங்கைக்கு வௌிநாட்டு நாணயங்கள் கடத்த முயன்ற இரு பெண்கள் கைது

சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.38.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ கரன்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 2 பெண்களை கைது செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. 

அதில் பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த 2 பெண்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர்களுடைய உள்ளாடைக்குள் 17,300 அமெரிக்க டாலர் மற்றும் 28,150 யூரோ கரன்சி இருந்தது. அதன் இந்திய மதிப்பு ரூ.38.5 லட்சம். அதை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.