web log free
March 28, 2023

நாளை நீர் விநியோகம் தடைபடும் பிரதேசங்கள்

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21) பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

இதன்படி நாளை (21) காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கொழும்பு, தெஹிவளை, கோட்டே, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபைகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும்.