Print this page

தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம், அடுத்த சில நாட்களில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம்

பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கான மூலகாரணத்தை வெளிக்கொணர, இரகசிய பொலிஸ் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்றும் போலீசார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பலவீனமடையவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.