Print this page

ராஜகிரியவில் ஒருவர் சுட்டுக் கொலை!

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தடுவ வீதி மஹானியார சந்தி பகுதியில் உள்ள கடையொன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.