Print this page

தேர்தல் திருத்தச் சட்டம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு

தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம், முறையான தயாரிப்பிற்காக சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சட்டமூலம் தயாரிக்கப்பட்ட பின்னர் இந்த வாரம் பெற்றுக் கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அவரது கையொப்பத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் சட்டமூலம் அமுலுக்கு வரும் எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.